
மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில், தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றும் அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்கிருஷ்ட் சேவா (2020 & 2021) பதக்கங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருந்த மதுரை மாநகர் காவல் துறையின் காவல் கூடுதல் துணை ஆணையர் (போக்குவரத்து திட்டமிடுதல்) A.திருமலைக்குமார், நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் R. எஸ்தர், தெப்பக்குளம் காவல் ஆய்வாளர் S. அருண்குமார் மற்றும் ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் N. ஹேமமாலா ஆகியோருக்கு மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ. லோகநாதன், இ.கா.ப., அவர்கள் பதக்கங்களை வழங்கி கௌரவித்தார்.
காவல் துறையின் மெச்சத்தகுந்த சேவைக்காக வழங்கப்படும் இந்த விருது, விருது பெற்ற அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு மேலும் ஊக்கமாக இருக்கும் எனவும், அனைவருக்கும் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையர் (தலைமையிடம்), தல்லாகுளம் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.
