ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத் தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு. அவை அனைத்தும் தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய தீர்வு காணப் பட்டு வருகிறது.
அந்த வகையில், இன்றைய தினம் நடை பெற்றமக்கள் குறைதீர்ப்புநாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா மற்றும் முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை வேண்டியும், சாலை வசதி, குடிநீர்வசதி வேண்டியும் என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 365 மனுக்களை பெற்றுக் கொண்டதுடன் மனுதாரர்கள் முன்னிலையிலேயே விசா ரனை செய்து அதன் மீது உரிய நடவடிக்கை யினை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தா. கிறிஸ்துராஜ் இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தினார்கள்.
