ரேஷனில் நிலவும் முறைகேடுகளை தவிர்க்கவும், உரியவர்களுக்கு மட்டுமே ரேஷன் செல்வதை உறுதி செய்யவும் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.. இந்நிலையில, ரேஷன் கார்டுதாரர்கள், கேஒய்சி சரிபார்ப்பை ஜூன் 30-க்குள் முடித்திருக்க வேண்டும் என்றும், அப்படி முடிக்காதவர்களின் ரேஷன் கார்டு ரத்தாகிவிடும் என்றும் தஞ்சை மாவட்டத்தில் ஒரு செய்தி விரைந்து பரவி கொண்டிருக்கிறது..
தஞ்சாவூர் மாவட்டத்தில் வாட்ஸ்அப் உள்ளிட்ட ஊடகங்களில் தகவல் ஒன்று பரவி வருகிறது. அதில் “தஞ்சாவூர் மக்களே ஜூன் 30-ந்தேதிக்குள் ரேஷன் கார்டுடன் ஆதார், மொபைல் எண், கைரேகை, இறந்தவர் பெயர் நீக்கம் போன்றவற்றை அப்டேட் செய்யாவிட்டால் ரேஷன் கார்டு செல்லாது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இப்படியொரு தகவல் பரவியதுமே, ரேஷன்தாரர்கள் குழப்பமும், கலக்கமும் அடைந்துள்ளனர்.. இந்த தகவல் உண்மையா? என்றும் தெரியாமல் தவித்துள்ளனர.. எனவேதான், இதுகுறித்து தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம், விளக்கம் ஒன்றை தந்துள்ளது..
அதில், “இது தவறான தகவலாகும். AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் கட்டாயமாக அனைத்து குடும்ப உறுப்பினர்களின் கை விரல் ரேகையை பதிவு செய்வது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான கடைசி தேதி வரையறுக்கப்படவில்லை. சமூக ஊடகத்தின் மூலம் வரப்பெற்ற செய்தியில் உண்மை ஏதுமில்லை என்று தஞ்சாவூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தெரிவித்துள்ளார். தவறான தகவலைப் பரப்பாதீர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
