
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TAMCO) வழங்கும் சுய உதவி குழுக்களுக்கான சிறுகடன் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மையின பெண்கள்/ஆண்கள் சுயஉதவிக் குழுக்களை அமைத்து, தனித்தனியாகவோ அல்லது சேர்ந்தோ சிறு வியாபாரம்/ சிறுதொழில் செய்து தங்களது குடும்ப வருமானத்தை பெருக்கிக்கொள்ளும் வகையில் அவர்களது குழுக்களுக்கு காய்கனி கடை, மீன் வியாபாரம், பூ வியாபாரம் பலகாரக்கடை, தையல் கடை, கைத்தொழில்கள், சிறு வணிகம் போன்றவற்றை நடத்த கடன் பெறமுடியும்.
பயனாளி சிறுபான்மை சுயஉதவிக் குழுவில் அங்கத்தினராக இருத்தல் வேண்டும், குழுவில் குறைந்தது ஆறுமாதம் சேமித்தல் மற்றும் கடன் அளித்தல் பணியில் தொடர்ந்து நன்றாக செயல்பட்டு இருக்க வேண்டும்.
60% சிறுபான்மையினராக அவசியம் இருத்தல் வேண்டும், எஞ்சியுள்ள 40% பிற்படுத்தப்பட்டோர்/ மிகப்பிற்படுத்தப்பட்டோர்/ சீர்மரபினர்/ ஆதிதிராவிடர் /பழங்குடியினர்/ இதர வகுப்பினர் இடம் பெறலாம்.
குழுவில் அதிகப்பட்சமாக 20 அங்கத்தினர்களும், குறைந்தபட்மாக 10 அங்கத்தினர்கள் இருத்தல் வேண்டும் சிறுபான்மையினர் குழுக்களில் பெண்கள் குழுக்களுக்கு முனனுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
அந்தந்த மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்கள், மாவட்ட ஆட்சியரகம்/ மணடல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் / மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள் நகர கூட்டுறவு வங்கி/ தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பிக்கலாம்.
அளிக்கப்படவேண்டிய ஆவணங்கள்
மதத்திற்கான சான்று/சாதிச் சான்றிதழ்/ பள்ளி மாற்றுச் சான்றிதழ் / சிறுபான்மையினர் மதம் குறித்து வழிப்பாட்டு ஸ்தலத்தால் அளிக்கப்பட்ட சான்று இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல் வேண்டும்.
வருமானச் சான்றிதழ் நகல்.
இருப்பிட சான்றிதழ் நகல்.
ஆதார் என் நகல்.
இதர குழு உறுப்பினரின் இணைப்புகள்.
இவற்றை கொண்டு சுயஉதவிக்குழுக்களில் சேர வேண்டும்.
