சென்னை, மடிப்பாக்கம், ராம் நகரில் வசித்து வரும் சுகந்தி, வ/57, என்பவர் 2019ம் ஆண்டு இவரது கணவர் ரமேஷ்குமாரின் அக்கா சரளாதேவி, அவரது கணவர் குணசேகர் மற்றும் இவர்களது மகன் விஜய் ஆகியோர், தனியார் விடுதி நடத்துவதற்காக கணவரிடம் ரூ.1 கோடி கடனாக தரும்படியும், 2 வருடத்திற்குள் வட்டியுடன் வங்கியில் செலுத்தி விடுவதாகவும் கூறியதன்பேரில், சுகந்தி தங்களுக்கு சொந்தமாக திருவான்மியூரில் உள்ள வீட்டை விற்று அதில் வந்த பணத்தில் ரூ.1 கோடியை வங்கி மூலமாகவும், ரொக்கமாகவும் என சரளாதேவி குடும்பத்தினரிடம் கொடுத்ததாகவும், சில மாதங்கள் மட்டும் வங்கியில் மாத கடன் சந்தா ரூ75,000/- செலுத்தி, பின்னர் 2020ம் ஆண்டு கொரோனா எனக்கூறி 2023ம் ஆண்டு வரை மாதம் ரூ.40,000/- என செலுத்தி, அதன் பின்னர் மீதத் தொகை ரூ.98,30,000/- பணத்தை செலுத்தாமல் ஏமாற்றி வந்தவர்களை பணம் செலுத்த கேட்டபோது, சரளாதேவி, குணசேகர் மற்றும் மகன் விஜய் ஆகியோர் தகாத வார்த்தைகளால் பேசி பணம் கொடுக்க முடியாது என மிரட்டி அனுப்பியதாகவும், மேற்படி மூவர் மீதும் நடவடிக்கை எடுத்து, எங்களுக்கு தர வேண்டிய பணம் ரூ.98,30,000/- பணத்தை பெற்று தருமாறும், சுகந்தி என்பவர் S-7 மடிப்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் கொடுத்ததின்பேரில், மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.


S-7 மடிப்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, இவ்வழக்கில் தொடர்புடைய எதிரிகள் குணசேகர், வ/67, 3வது மெயின் ரோடு, பள்ளிக்கரணை, சென்னை மற்றும் இவரது மகன் விஜய், வ/36 ஆகிய இருவரை (01.11.2025) கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட எதிரிகள் இருவரும் விசாரணைக்குப் பின்னர் (01.11.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில்அடைக்கப்பட்டனர்.
